ANNUAL GENERAL BODY MEETING 2017-18 PART I

THE MADRAS CIVIL AUDITASSOCIATION
CAT.II AND CATIII
                 31.07.2018
2017-18ஆண்டறிக்கை


தோழர்களே, தோழியர்களே,
முன்னர் மதராஸ் ராஜதானியிலும் நாடு விடுதலைபெற்றபின் தமிழகத்திலும்
கடந்த 100-ஆன்டுகளுக்கும் மேல் நமது அரசு ஊழியர்கள் மற்றும் தொழிற்சங்க
வரலாற்றில் சிறப்பாக துடிப்புடன் செயல்பட்டுகொண்டிருக்கும்
நமது THE MADRAS CIVIL AUDIT ASSOCIATION-ன் 2017-18ஆம் ஆண்டு சங்க
ஆண்டுப் பொதுக்குழுக்கூட்டத்தில் கலந்துகொள்ள வந்திருக்கும் அனைவரையும்
வருக, வருக என வரவேற்று 2017-18ஆம் ஆண்டுக்கான பொதுக்குழுஅறிக்கையை
உங்கள் முன் சமர்ப்பிக்கிறோம்.
அஞ்சலி
மத்தியஅரசு ஊழியர் மகாசம்மேளனத்தின் அமைப்பாளர்களில் ஒருவரும்
NFPTE தலைவருமான் தோழர் D.ஞானையா, மத்திய அரசு ஊழியர் மகாசம்மேளன
தமிழ்மாநிலக் குழுவின் முன்னாள் தலைவர் தோழர் ஏ.ஜி.பசுபதி,
மாநில அரசு ஊழியர்கள் சங்கங்களின் அகில இந்தியக்கூட்டமைப்பின் செயலாளர்
தோழர் ஆர்.முத்துசுந்தரம், மற்றும் அதன் தலைவர் தோழர் சுகுமோல் சென்,
அனைத்து இந்திய காப்பீட்டு ஊழியர் சங்க முன்னாள் அகில இந்தியத் தலைவர்
தோழர் என்.எம்.சுந்தரம், JCM.STANDING COMIITEE- STAFF SIDE தோழர் G.L.தார்
ஆகிய தலைவர்கள் கடந்த ஆண்டு மறைந்தனர்.
திரையுலகில் இருந்தநடிகை திருமதி ஶ்ரீதேவி, பாடகி எம்.எல்.ராஜேஸ்வரி, எழுத்து
சித்தர்  என அழைக்கப்பட்ட எழுத்தாளர் திரு பாலக்குமரன் ஆகியோர் மறைந்தனர்.
இந்தியாவின் முதல் செயற்கைகோள் “ரோகினி” உருவாக்கி விண்ணில் ஏவிய
 விண்வெளி விஞ்ஞானி திரு.U.R.ராவ் அவர்களும்
ஒஹி புயலில் இறந்த பல நூறு தமிழகமீனவர்கள்,
கோரக்பூர் அரசு மருத்துவமனையில் ஆக்சிஜன் இல்லாமையால் இறந்த 70
குழந்தைகள்,
குரங்கனி காட்டு தீ விபத்தில் இறந்த மலையேறிகள்,
காத்மாண்டு விமானவிபத்தில் இறந்தவர்களுக்கும்
மும்பை  எலிபன்ஸ்டைன் ரயில் நிலைய பால நெருக்கடியில்
மரணித்தவர்களுக்கும்
பூரி-ஹரித்துவார் செல்லும் உத்கல் விரைவு தடவண்டி விபத்தில்
இறந்தவர்களுக்கும்,
13-5-2018 முதல் 15-5-2018 வரை தலைநகர் டெல்லி, உ.பி.மற்றும் ஹரியானாவில்
வீசிய தூசிபுயலில் உயிரிழந்த 75 க்கும் மேற்பட்டவர்களும்,
ஆந்திர மாநிலம் கோதாவரி நதியில் நடந்த படகுவிபத்தில் 22 மேற்பட்டவர்களும்.
கேரள நிபா வைரஸ் தாக்குதலில் 14 மேலானவர்களும்,
தமிழகத்தில் தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் தொழிற்சாலை மூட அமைதியாக
போராடிய லட்சகணக்கானவர்களில் 15க்கும் மேலானவர்கள் போலிஸ் துப்பாக்கி
சூட்டிலும் உயிர் இழந்தனர்.
இதுவரை மத்திய அரசு அமைத்த ஊதியக்குழுக்களில் ஓரளவு மத்திய அரசு
ஊழியர்களின் எதிர்பார்ப்பை ஈடுகட்டும்வகையிலும் தனித்தன்மை வாய்ந்ததாகவும்
அமைந்த 5வது மத்திய அரசு ஊழியர்களின் ஊதியக்குழுவின் தலைவர்
உச்சநீதிமன்ற ஓய்வுபெற்ற நீதியரசர் உயர்திரு ரத்தினவேல்பான்டியன் அவர்கள்.
மத்திய அரசு ஊழியர்களில் NO DEARNESS RELIEF TO COMPASSIONATE
GROUND APPOINTEESAND REEMPLOYED EXSERVICEMEN WHILE SERVING
IN THE GOVERNMENT AS GOVERNMENT SERVANTS என்பதை ரத்து செய்tது
அனைத்து மத்திய அரசு ஊழியர்கள் போன்று அவர்களுக்கும் DA கிடைக்கவும்,.
மறைந்த அரசு ஊழியரின் பெற்றோர்களுக்கும், மறுமணம் செய்த விதவைகளுக்கும்
குடும்ப ஓய்வூதியம் உண்டு என்றும் கிடைக்கச்செய்தவர். பல்வேறு மனித
உரிமைகள், மற்றும் மண்டல் கமிஷன் பரிந்துரைகள் நடைமுறைபடுத்த உதவிய
தீர்ப்புகளை வழங்கிய அம்மாபெரும் நீதியரசர் கடந்த பிப்ரவரியில் மறைந்தார்
நமது சங்கம் 1960-களில் உயிர்பெற்றுக்கொன்டிருந்த சங்கத்தின் உறுப்பினர்களை
தன்முதல் உச்சக்குரல் ஈந்து திரட்டிய மூத்த தலைவர் தோழர் கட்டபொம்மன்
சுவாமிநாதன் சமீபத்தில் இறந்துவிட்டார். அவருக்கு நமது அஞ்சலியை
உரித்தாக்குகிறோம்.
  மேலும் நம்முடன் பணிபுரிந்த அருமை தோழர்கள் ராஜேந்திர பிரசாத் Sr.Ar,
செந்தில் நாயகம் AAO,ஜோசப் இன்பராஜ்Sr.Ar,ஆகியோர் கடந்த ஆண்டுநம்மைவிட்டு
மறைந்தனர்.அவர்களுக்கு நமது அஞ்சலியை உரித்தாக்குகிறோம்.
நமது தமிழகத்தில் நடந்த மற்றும் நடந்துகொன்டிருக்கும் பல்வேறு மக்கள் நல
போராட்டங்களிலும், மற்றும் மேலும் உலகஅளவில் மக்கள் போராட்டங்களிலும்,
தொழிலாளர் போராட்டங்களிலும் உயிர்நீத்த தியாகிகளுக்கும், இயற்கைப்
பேரிடர்களில் உயிர்நீத்தவர்களுக்கும் நமது அஞ்சலியை உரித்தாக்குகிறோம்.
நமது செயற்குழு
2017-18ஆண்டுக்காக தேர்ந்தெடுக்கப்பட்டு, கீழ்கண்ட நமது செயற்குழு
உறுப்பினர்களை உள்ளடக்கிய செயற்குழுவாக நாம் கடந்த 4-7-2018 அன்று
நமது MCAA சங்கத்தின் மூத்த மேனாள் தலைவர் தோழர் D. பாலசுப்பிரமணியன்
மற்றும் தோழர் K. நீலா ஆகியோர்கள் முன்னிலையில் பதவி ஏற்றோம்.


List of Office Bearers
CAT II
PRESIDENT                            G..லட்சுமிநரசிம்மன்
VICE PRESIDENT                 T.ஆனந்தகுமார்.
SECRETARY                   K.சிவகுமார்
ASST. SECRETARY    T..அருள்மணி                   
TREASURER     K.ஜெகன்நாதன்.II
COMMITTEE MEMBERS       K..அன்புமலர்
K. முகுந்தராகவன்
R.  பொய்யாமொழி
B. செந்தில்குமார்
M.செந்தில்குமார்


CAT III
PRESIDENT                  லீலாசுப்பிரமனியன்              
VICE PRESIDENTS               S.பாபுரவிசந்திரன்
             N.சுப்பிரமனியன்
SECRETARY                       R..சுந்தரேசுவரன்
ASST.SECRETARIES              G. மதியழகன்
            K. நடராஜன்  IX   
TREASURER                    R.மனோகர்.
COMMITTEE MEMBERS     அமர்ஜித்குமார் 
         K.அமுதா
            T.கீதா
           A. Md.சாஜுதின்
                              R. முரளிதரன்-I
         P.நந்தகோபால்
        K.பிராபாகரன்
                                                பிரஸாந்த்குமார்           
          R. ரமேஷ்


உலகளாவிய நிலைமை:
சென்ற ஆண்டு நாம் சந்தித்த அதே பிரச்சனைகளே இன்றும் மேலோங்கி
வந்துள்ளன.  முதலாளித்துவ வளர்ச்சிப்போக்கில் விரைவான தாராளமயமும்,
நிதி மூலதனத்தின் செயல்பாடும் மேலோங்கி இருக்கும் காலகட்டமாக உள்ளது.
இதனால் நிதி வேகமாக சுழலுமே தவிர வேலை உருவாக்கலும், ஏழ்மை
குறைப்பும் இருக்காது. இதன் காரணமாக அமெரிக்கா பணக்கார நாடாக
இருந்தாலும் டிரம்ப் அரசால் அங்கு வேலை வாய்ப்பை அதிகப்படுத்தமுடியவில்லை
..  இதனால் உழைக்கும் மக்களின் வாழ்வாதாரங்கள் குறைவதால் அவர்களின்
வாழ்நிலை மோசமடைந்துள்ளது. இதனால்தான் சமீபகாலத்தில் அமெரிக்காவில்
வெளிநாட்டவர்களையும், கருப்பின மக்களையும் தாக்கும்போக்கு அதிகரித்துள்ளது.
இதேபோன்று ஐரோப்பாவிலும் தாக்குதல் காணப்படுகிறது.
இதேநிலைதான் இதர பணக்கார நாடுகளான ஐரோப்பிய நாடுகளான பிரிட்டன்,
பிரான்ஸ், கிரீஸ், போர்சுகல், ஜெர்மனி மற்றும் ஜப்பான் போன்ற நாடுகளிலும்
உள்ளது. அதனால்தான் வீசாவுக்கு புதிய சட்டங்கள் விதிக்கப்படுகின்றது. இது
மற்ற நாடுகளை அதிர்ச்சியில் தள்ளியுள்ளது.
பெரும் முதலாளிகள் தங்கள் பொருட்களுக்கு சந்தைகளைப் பெருக்க அதிக
திறனுடைய இயந்திரங்களைப் பயன்படுத்தும்போது மற்ற தொழிலாளிகள்
வேலையிலிருந்து வெளியேற்றப்படுகிறார்கள். இதுமேலும் வேலையின்மையை
அதிகரிக்கிறது. இதனால் அத்தணை நாடுகளிலும் மக்கள் மேலும் மேலும்
ஏழ்மையில் தள்ளப்படுள்ளார்கள். இதனை எதிர்த்து அண்மையில் பிரான்ஸ்,
இங்கிலாந்து, ஜப்பான், அமெரிக்கா, ஜெர்மனி, கிரீஸ் ஆகிய நாடுகளில்
பல்வேறு ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றுள்ள செய்திகள் ”தி எகனாமிஸ்ட்” என்ற
பத்திரிகை வெளியிட்டுள்ளது.
நிதிமூலதனத்திற்கு  அரசுகள் சலுகைகளை அள்ளிக்கொடுக்கும்போது அரசுக்கு
வருமானம் குறைகிறது. எனவே மக்கள் சேமநல திட்டங்களுக்கான
செலவினங்களை சிக்கனக்கொள்கை என்ற பெயரில் அரசுகள் வெட்டுகின்றன.
 மருத்துவ வசதி, பென்ஷன் வெட்டு, பணி ஓய்வுபெறும் வயதை அதிகரிப்பது
போன்ற நடவடிக்கைகளில்  பணக்கார நாடுகள் இறங்கியதில் அதற்கு எதிரான
போராட்டங்கள் வலுத்துவருகின்றன. பிரான்சில் தொழிலாளிகளும் மாணவர்களும்
ஒன்றாக நின்று போராடினர்.
உலகத்தின் செல்வந்தநாடான அமெரிக்கா தனக்கு உதவாத வர்த்தக ஒப்பந்தத்தை
ஏற்காது எனவும்  உலகவர்த்தக சபையிலிருந்து வெளியேறுவதாகவும்
அறிவித்துள்ளது.   இவையெல்லாம் உலகையே பாதிக்கக்கூடியவை.
இத்தகைய அரசுகளை மக்கள் ஆட்சியிலிருந்து நீக்குகிறார்கள். நிதி மூலதனமானது
தன்னைப் பாதுகாத்துக் கொள்ள தனக்கேற்ற அரசினை  ஆதரித்து ஆட்சியில்
அமர்த்துகிறது. இதனைப் பல நாடுகளில் கண்டு வருகிறோம். இந்தக்கட்சிகள்
மக்களின் ஒற்றுமையினை பாதிக்கும்வகையில் செயல்படுகின்றன.  மக்களை
உறிஞ்சி கார்ப்பரேட்டுகளைக் கொழுக்க வைக்கின்றன.  உலகெங்கும் இதற்கெதிராக
எழுந்துவரும் போராட்டங்கள் நமக்கு ஆறுதலளிக்கின்றன.


இந்திய நிலைமை;
இந்தியாவில் மத்திய அரசு கடைப்பிடித்துவரும் மக்கள் விரோத, தொழிலாளர்
விரோத நடவடிக்கைகளால் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
ஆட்சிக்குவரும்போது கொடுத்த எந்த வாக்குறுதியும் நிறைவேற்றப்படவில்லை.
கருப்புப்பணத்தை ஒழிப்பதாகக் கூறி மத்திய அரசு எடுத்த ரூபாய் நோட்டு
மதிப்பிழப்பு நடவடிக்கையால் மக்கள் கடுந்துயருற்றனர்.  ஏராளமானோர் வங்கி
வாசல் நோக்கிய வரிசையில் நின்றபோதே உயிரிழந்தனர். ஆனால்
பெரும்செல்வந்தர்கள் எந்தவித சிரமமுமின்றி தமது நூற்றுக்கணக்கான கோடிகள்
பணத்தை மாற்றிக்கொள்ள முடிந்தது.
  இந்த நடவடிக்கைக்காகக் கூறப்பட்ட காரணங்கள் எதுவும் நிறைவேறவில்லை
என்பது மட்டுமின்றி, இதனால் மாபெரும் இழப்புகள்தான் ஏற்பட்டுள்ளது.
இந்நடவடிக்கையால் சிறு மற்றும் குறுதொழில்கள் முடங்கின.  சிறுமுதலாளிகள்
பலர் தற்கொலை செய்துகொண்டனர்.
புதிய ஒரே இந்தியா மிளிர , ஒரே இந்தியா- ஒரே வரி என சொல்லி GST எனப்படும்
சரக்கு மற்றும் சேவை வரியை ஜூலை 1-2017 முதல் மத்திய அரசு கொண்டுவந்து
மக்கள் மீது மீண்டும் ஒரு பொருளாதார தாக்குதலை தொடுத்து, அதன் தாக்கமும்
தொழில்துறையை மிகவும் பாதித்துள்ளது என்பதுதான் மிக வேதனை அளிக்கிறது.
ஆக GST-யும் நமது வாழ்க்கையில் விளையாடி விட்டது.
ஓவ்வொரு ஆண்டும் இரண்டு கோடிப்பேருக்கு வேலை கொடுப்பதாகக் கூறிய அரசு
தான் ஆட்சியிலிருந்த 4-ஆண்டுகளில் சில லட்சம் வேலைகளைத்தான்
உருவாக்கியுள்ளது.
 அது மட்டுமின்றி, இந்த மார்ச் 18இல் இந்த அரசு நிரந்தர வேலைகளை ஒழித்து FIXED
TERM EMPLOYMENT சட்டத்தை நிறைவேற்றி, இளைஞர்களின் எதிர்காலத்தையே
முதலாளிகளின் கருணைக்கு ஒப்படைத்துள்ளது.
விலைவாசியைக் கட்டுப்படுத்துவதாகக் கூறிய அரசு, சர்வதேசஅளவில் கச்சா எண்ணை
விலை கடுமையாக வீழ்ச்சியடைந்த போதும், 9 முறை எக்சைஸ் வரியை ஏற்றி,
உலகிலேயே அதிகவிலைக்கு பெட்ரோல், டீசலை விற்று வருகிறது.  அதனால்
அனைத்து விலைகளும் உயர்ந்து சாதாரண மக்களின் வாழ்க்கை கடுமையாக
வீழ்ச்சியடைந்துள்ளது.
பல லட்சக்கணக்கான கோடிகளை வங்கிகளிலிருந்து கடனாக வாங்கிக் கொண்டு
செல்வந்தர்கள் சிலர் நாட்டைவிட்டுத் தப்பியோடிவிட்டனர்.  இதனால் வங்கிகளில்
பணத்தைப் போட்டுள்ள சாதாரண மக்களது பணம் ஆபத்துக்குள்ளாகி இருக்கிறது.
  வாராக்கடனால் பல வங்கிகள் தத்தளித்து வருகின்றன.  மோசடி செய்தோரைப்
பிடிக்க முயலாமல் அரசு வங்கிகளைத் தனியார் மயமாக்கும் முயற்சியில்
ஈடுபட்டுள்ளது.  
அதேபோல் ஊழியர்களுக்கு சென்றமுறை 14% ஊதிய உயர்வு கொடுத்த வங்கிகள்
வெறும் 2% ஊதிய உயர்வைத்தான் இப்போது தர முடியும் என்று ஊழியர் வயிற்றிலும்
அடிக்கின்றன.  
விவசாயிகளின் நிலை நாளுக்குநாள் மோசமடைந்து வருகிறது.  அரசு
வேளாந்துறையினருக்கு கட்டுப்படியாகும் விலைகொடுப்பதாகக் கொடுத்த தேர்தல்
வாக்குறுதிமொழியைக் காப்பாற்றாததால் இந்தியநாடு முழுவதும் அரசு கொள்கைகளுக்கு
எதிரான பல்வேறுவிதமான பெரும் போராட்டங்கள்வெடித்துள்ளன.  மகாராஷ்டிராவில்
விவசாயிகள் நடத்திய மாநிலத்தின் பல பகுதிகளில் இருந்து மும்பை நோக்கிய
மாபெரும் பேரணி குறிப்பிடத்தக்கது.
கல்வி மற்றும் சுகாதாரத் துறைகளையும் மத்திய அரசு தனியாரிடம் கொடுக்க
நடவடிக்கை எடுத்து வருகிறது.  
மேலும் அனைத்து நிதியையும் மக்களிடம் சேர்க்க ஆதார் எண் அவசியம் எனக்கூறி
எல்லா எதிர்ப்புகளையும் மீறி வங்கிகளில் கணக்குதொடங்குதல், தொடருதல், வைப்பீடு
வைத்தல், ஆயுள்காப்பீடு, சமையல் எரிவாயு-மானியம், சத்துணவு, ஓய்வூதியம்,
வருமானவரி திருப்பித்தருதல் என எல்லா துறைகளிலும் ஏகப்பட்ட எதிர்ப்புகளை மீறி
ஆதார் எண்-ஐ அவசியாமாக்கியது இந்த மத்தியஅரசு. ஆனால் இப்பொழுது NATIONAL
PAYMENTS CORPORATION OF INDIA க்கு பின் ஆதார் இணைப்பு என்பது நம்பிக்கைக்கு
உரியது அல்ல, ஒருவரது பல வங்கி பணம் முழுவதுமாக இந்த எண்ணால் மோசடி
செய்யப்படுகிறது என்றும் பலாயிரம் மோசடிகளுக்கு இது வழி வகுப்பதாக கூறி
“ALL MEMBER BANKS SHOULD REMOVE THIS FUNCTIONALITY (AADHAAR FACILITY) BOTH
AS A REMITTER AND BENIFICIARY. ALL, ALL INTERFACES CURRENTLY OFFERING THIS
FUNCTIONALITY SUCH AS UPI,IMPS apps , SHOULD REMOVE THIS OPTION THEIR RESPECIVE
APPS BY AUGUST 31, 2018”  என OFFICIAL சுற்றறிக்கை வெளியிட்டு ALERT செய்துள்ளது.


அரசாங்கத்தின் இது போன்ற மக்கள் விரோதகொள்கைகளை முறியடித்து
தொழிலாளர்களும், மக்களும் போராடிப்பெற்ற உரிமைகளைப் பாதுகாக்க பெரும்
போராட்டம் நடத்த வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.